பிரதமர் மோடியின் தாயார் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்த மாற்றுத்திறனாளி : பிரம்மிக்க வைத்த புகைப்படம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2022, 3:29 pm
Heeraben modi - Updatenews360
Quick Share

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது மறைவை ஒட்டி கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று மதியம் தீப அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற உள்ளது.

இதில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உட்பட பாஜகவினர் பலர் கலந்து கொள்ள உள்ளனர். அஞ்சலி நிகழ்விற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வரும் நிலையில் அம்மன்குளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சங்கர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஹீராபென் ஓவியத்தை தரையில் தத்ரூபமாக வரைந்துள்ளார்.

Views: - 389

0

0