குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த கொடூரம்… அண்ணியின் குரூர புத்தி ; விருதாசலத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

Author: Babu Lakshmanan
31 January 2024, 4:33 pm
Quick Share

விருதாசலத்தில் சொத்து பிரச்சனை முன் விரோதம் காரணமாக வீட்டின் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு (மலம்) கலந்ததாக போலீசில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் விருதாசலம் குட்டக்கார தெருவில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருக்கும் இவரது அண்ணன் மனைவி மகாலட்சுமிக்கும் கடந்த ஒரு வருடமாக சொத்து பிரச்சனை இருந்து வருகிறது.

இந்த நிலையில், வெங்கடேஷ் வீட்டில் குடிநீர் குழாயில் துர்நாற்றம் வீசியதன் காரணமாக, சந்தேகத்தின் பெயரில் மொட்டை மாடியில் உள்ள சின்டெக்ஸ் டேங்கை திறந்து பார்த்துள்ளார். அப்போது, வெள்ளை நிற பனியன் துணியில் மனித கழிவை (மலம்) துணியில் சுருட்டி உள்ளே போடப்பட்டது தெரிய வந்தது.

இதன் காரணமாக வெங்கடேஷ் அவரது அண்ணன் மனைவி மகாலட்சுமி இதனை செய்திருக்கலாம் என விருதாசலம் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மகாலட்சுமியை தேடி வருகின்றனர்.

அண்ணன், தம்பி சொத்துப் பிரச்சனையில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 257

0

0