தமிழகத்தில் 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை : கனமழையால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2023, 8:52 am
Leave - Updatenews360
Quick Share

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை : கனமழையால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது.

இதனை அடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அறிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது, கரூர் மாவட்டத்திலும் கனமழை காரணமாக கரூர் ஆட்சியர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.

Views: - 293

0

0