ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதில் ஒரு ரூபாய் டீ கப்… குழந்தைகளின் உயிரில் அலட்சியமா..? அரசு மருத்துவமனையின் அவலம் ; அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
31 July 2023, 6:13 pm
Quick Share

உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க் இல்லாததால் டீக்கடையில் பேப்பர் கப்புகளை வாங்கி பயன்படுத்தும் அவலம் அரங்கேறி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவதியற்ற மாணவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மாணவனை அழைத்துக் கொண்டு அவர் தந்தை தந்தை உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூச்சுக் குழல் வழியாக மருந்தினை செலுத்த வேண்டுமென்று அறிவுறுத்திருக்கிறார்கள்.

மாணவனின் மூச்சு குழல் வழியாக மருந்தை செலுத்துவதற்குண்டான மருத்துவ உபகரண கருவி இல்லாத காரணத்தினால், அருகிலுள்ள டீ கடையில் உபயோகிக்கும் பிளாஸ்டிக் கப்புகளை வாங்கி வந்து, அதன் உதவியுடன் அந்த மருந்தினை மாணவனின் மூக்கு வழியாக செலுத்தும் காட்சி அங்கு உள்ளவர்களை பதைபதைப்பில் ஆழ்த்தியது.

அரசு மருத்துவமனைக்கு சாதாரண ஏழை, எளிய மக்கள்தான் அதிக அளவில் சிகிச்சை பெற வருகின்றனர். ஆனால் அங்கே முறையான சிகிச்சை அளிப்பதற்கு கூட ஒரு சிறிய அளவிலான மருத்துவ உபகரணம் கூட இல்லாத சூழல் நிலவுகிறது.

அந்த பள்ளி மாணவனுக்கு ஆக்சிஜன் செலுத்த மாஸ்க் இல்லாத காரணத்தினால் டீக்கடையில் இருந்து டீ குடிக்கும் கப்புகளை வாங்கி வந்து அதை வைத்து மூச்சுத் திணறல் ஏற்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் ஆபத்தான விஷயம். இந்த நிலையை அரசு மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து செய்கின்றது. இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகின்றனர்.

Views: - 280

0

0