‘ராஜிவ்காந்தி வழக்கு குற்றவாளிகள் கொலைகாரர்கள் தான்’: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி..!!

Author: Rajesh
18 May 2022, 3:13 pm
Quick Share

சென்னை: பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது.

அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Views: - 491

0

0