இறந்தும் வாழும் ஆசான்…. மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்.. உதவி கேட்டு மனைவி கண்ணீர் கோரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2023, 11:18 am
GH - Updatenews360
Quick Share

தருமபுரி அருகே மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது45). தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஸ்ரீ நிகேஷ் (14), கவின் நிலவன் (8), இரண்டு மகன்களும் உள்ளனர்.

செந்தில்குமார் கடந்த புதன்கிழமை பள்ளி முடித்து விட்டு மாலை வீட்டிற்கு வந்த போது விபத்தில் இருசக்கர வாகன மோதி படுகாயம் அடைந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று அவருக்கு மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் மருத்துவர்கள் செந்தில்குமார் மனைவி விஜயலட்சுமி மற்றும் அவர் உறவினர்களிடம் உடல் உறுப்புகள் தானம் குறித்து தெரிவித்தனர்.

இதனால் அவரது மனைவி தனது கணவரின் உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக மருத்துவ குழுவினர் நேற்று இரவு 9 மணி முதல் இன்று விடியற்காலை இரண்டு மணி வரை விடிய, விடிய செந்தில்குமாரின் உடலில் நல்ல நிலையில் உள்ள இருதயம், நுரையீரல், லிவர், கிட்னி, கணையம், கண் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து சென்னை, வேலூர், சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

கண் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெற்றுக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து மனைவி விஜயலட்சுமி கூறும் போது என் கணவர் தான் எங்களுடைய வாழ்க்கை என்று இருந்தோம். அவர் இல்லாத இந்த வாழ்க்கையை நானும் என் இரண்டு பிள்ளைகளும் எப்படி வாழ்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். இதனால் தமிழக அரசு கருணை அடிப்படையில் அரசு வேலை ஒன்று வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

Views: - 247

0

0