காதலியை சந்தித்து விட்டுச் சென்ற காதலன் உயிரிழப்பு… பெண்ணின் தாய் மாமன்கள் கைது ; போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
29 June 2023, 4:59 pm
Quick Share

காஞ்சிபுரம் ; காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் நிரஞ்சன் (21) ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா (19) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

காதல் விவகாரம் ரம்யாவின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ரம்யாவின் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இருப்பினும், அவர் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தானாக புறப்பட்டு நிரஞ்சன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர், பெரியவர்கள் சமாதானம் செய்து ரம்யாவை அழைத்துச் சென்றுள்ளனர். இதனால், ரம்யாவின் பெற்றோர் அவரை திருவள்ளூர் மாவட்டம் புள்ளரம்பாக்கத்தில் உள்ள ரம்யாவின் பாட்டி வீட்டில் தங்க வைத்திருந்ததாகவும், இதனை அறிந்து அங்கு சென்ற நிரஞ்சனை கண்டித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி ரம்யாவின் தாய் மாமன்களான புகழேந்தி மற்றும் ஜனார்த்தனன் இருவரும் நிரஞ்சன் வீட்டிற்கு வந்து, வீட்டில் இருந்தவரை கட்டை மற்றும் கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம்பட்ட நிரஞ்சன் என்பவருக்கு இடது கன்னத்தில் வீக்கம் மற்றும் இடது காதுக்கு பின்னால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பின்னர், நிரஞ்சன் சுயநினைவை இழந்து சவீதா மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி தற்போது இறந்து போனார்.

இதையடுத்து, காதல் விவரத்தில் இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜனார்த்தனன், புகழேந்தி ஆகிய இருவர் மீதும் தற்போது ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Views: - 372

0

0