பட்டப்பகலில் பயங்கரம்… பணிபுரியும் இடத்தில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை… நெல்லையில் பகீர் சம்பவம்!! ;

Author: Babu Lakshmanan
2 October 2023, 5:47 pm
Quick Share

திருநெல்வேலி டவுன் அழகு சாதன பொருட்கள் கடையில் இளம்பெண் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பேட்டையை அடுத்த திருப்பணிகரிசல் குளத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகள் சந்தியா (18). இவர் நெல்லை டவுன் கீழ ரத வீதியில் உள்ள அழகு சாதன பொருட்கள் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இன்று மதியம் சந்தியா கடையின் அருகில் உள்ள குடோனுக்கு பொருட்கள் எடுக்க சென்றுள்ளார்.

அப்போது, குடோனில் அவர் மர்ம நபரால் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். நீண்ட நேரம் ஆகியும் வராததால், கடையிலிருந்து கடையில் வேலை பார்த்தால் மற்றொரு பெண் சென்று அங்கு பார்க்கும்போது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து கடை உரிமையாளரிடம் தெரிவித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் காவல் உதவி ஆணையாளர்/ காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரயோக பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த சந்தியாவின் உறவினர்கள் அங்கு வந்து கதறி அழுதனர்.

இளம்பெண் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 376

1

0