ஆர்எஸ்எஸ் பேரணிக்கு புதிய கட்டுப்பாடுகள்… தமிழக டிஜிபி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2023, 5:49 pm
RSS Rally DGP - Updatenews360
Quick Share

தமிழ்நாட்டில் வரும் 16-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில், இதற்கான நிபந்தனைகளை வெளியிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.

சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணியில் ஈடுபட வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பேரணியின்போது பொதுமக்களுக்கு இடையூறாகவும், வாகன நெரிசல் ஏற்படாத வகையில் பேரணியை நடத்த வேண்டும். பேரணியின்போது எந்த விதமான பாடலோ அல்லது சைகைகளோ காண்பிக்காமல் நடக்க வேண்டும். பேரணியில் பங்கேற்போர் எந்தவிதமான குச்சி, லத்தி போன்ற காயமேற்படுத்தும் ஆயுதங்களை கொண்டு செல்ல கூடாது.

பேரணியில் சாதி, மதம் உள்ளிட்டவை தொடர்பான பாடல்களை பாடவோ, கோஷமிடவோ கூடாது என உத்தரவிட்டுள்ள டிஜிபி, நிபந்தனைகளை மீறினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் .

Views: - 272

1

0