வீட்டில் தனியாக இருந்த பிளஸ் டூ மாணவர் தூக்கு போட்டு தற்கொலை : தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. போலீசா விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
20 July 2022, 9:55 am
+2 Student Suicide - Updatenews360
Quick Share

மதுரை : ஜெய்ஹிந்த்புரம் ரத்தினபுரத்தில் பிளஸ் டூ மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரோடு ஜெய்ஹிந்த்புரம் சொக்ககொத்தன்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் கௌதம் குமார் (வயது 17). இவர் பிளஸ் டூ படித்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிளஸ் டூ மாணவன் கௌதம் குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 459

0

0