வீடு புகுந்து உறங்கிக் கொண்டிருந்த ரவுடியை சரமாரியாக வெட்டி சாய்த்த கும்பல் : திண்டுக்கல் அருகே பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2023, 2:03 pm
Rowdy Murder - Updatenews360
Quick Share

திண்டுக்கல் அருகே மாலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 29 ), இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது.

முனீஸ்வரன் மீது திண்டுக்கல் நகர் வடக்கு திண்டுக்கல் திண்டுக்கல் தாலுகா உள்ளிட்ட காவல் நிலையங்களில் நான்கு கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் முனீஸ்வரன் வீட்டில் இன்று மாலை நேரத்தில் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த எட்டுக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு முனீஸ்வரனை சரமாரியாக வெட்டி முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முனீஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கைரேகை மற்றும் தடயறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த பொருட்களில் தடயங்களில் சேகரித்தனர்.

மேலும் இந்த கொலை தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்தும் கொள்ளையாளிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்

Views: - 458

0

0