துரத்திய மர்மநபர்கள்… போலீசிடம் பாதுகாப்பு கேட்டும் பலனில்லை.. தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2024, 8:48 am
News7
Quick Share

துரத்திய மர்மநபர்கள்… போலீசிடம் பாதுகாப்பு கேட்டும் பலனில்லை.. தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர் தனியார் செய்திதொலைக்காட்சியில் செய்தியாளராக கடந்த ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் இன்று செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். வழக்கம் போல இரவில் வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் அவரை நோட்டமிட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர் வெளியே வந்த நேரம் பார்த்து சரமாரியாக அந்த மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது.

இதனைத் தொடர்ந்து வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செய்தியாளர் நேசப் பிரபுவை தகவலறிந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் அவரை மீட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

மர்ம நபர்கள் தன்னை நோட்டமிட்டு வருவதாக தாக்குதலுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பே செய்தியாளர் நேசபிரபு காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்திற்கு பத்திரிகயைளர்கள் சங்கம், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கொடூர செயலில் ஈடுபட்டவர்களை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும். நேசபிரபுவின் புகார் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்தார்களா? என்பதையும் விசாரிக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறைக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Views: - 233

0

0