வாழ்நாள் முழுவதும் அலைய விட்டுருவேன்.. மிரட்டிய பாஜக வேட்பாளர்… டக்கென தேர்தல் அதிகாரி கொடுத்த ரியாக்ஷன்..!!!

Author: Babu Lakshmanan
5 April 2024, 4:56 pm
Quick Share

கோபி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த கண காணிப்பு நிலைக்குழவினரை பகிங்கிரமாக மிரட்டிய பாஜ வேட்பாளர் ஏபி முருகானந்தம் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு நிலைக்குழு அமைக்கப்பட்டு 3 ஷிப்டுகளாக இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு அணி குழு தலைவர் தலைமையில் ஒரு சப் இன்ஸ்பெக்டர், ஒரு தலைமை காவலர், ஒரு காவலர் மற்றும் ஒரு வீடியோ கிராபருடன் வாகன சோதனை நடத்தப்படுகிறது.

மேலும் படிக்க: நாடாளுமன்ற தேர்தலில் திமுக ‘டாப்’…. 2026 தேர்தலில் கலக்கப் போகும் விஜய் கட்சி ; வெளியானது கருத்துக்கணிப்பு..!!

அதன் ஒரு பகுதியாக, கோபி அருகே உள்ள கெட்டி செவியூர் குறிச்சி பிரிவில் ஈரோடு – திருப்பூர் மாவட்ட எல்லையில், முருகேசன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமை காவலர் மகேந்திரன், காவலர் மெய்யானந்தம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, திருப்பூரில் இருந்து வந்த பாஜ வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் வந்த காரையும் கண்காணிப்பு நிலைக்குழுவினர் வாகன சோதனைக்காக நிறுத்தி உள்ளனர். அப்போது, காரை ஓரமாக நிறுத்தாமல் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நிறுத்தியதோடு, வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்தார். மேலும், கண்காணிப்பு நிலைக்குழுவை சேர்ந்த அலுவலர் முருகேசனின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு மிரட்டினார்.

மேலும் படிக்க: பிரச்சாரத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக புகார். . பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதி மீது போலீசார் வழக்குப்பதிவு

அதைத்தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் மற்ற காவலர்களும் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கூறவே, அவரது பெயரை கூறுமாறு வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மிரட்டல் தொனியில் பேசினார். அப்போது, அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுவதாக கண்காணிப்பு நிலைக்குழுவினர் கூறவே, ஆத்திரமடைந்த வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், மரியாதையாக பேசி பழகுங்கள், உங்கள் அனைவரையும் வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன் என்று பகீங்கிரமாக மிரட்டினார்.

அப்போது காவலர்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறியபோது, தொடர்ந்து காவல்துறையினருக்கு மிரட்டல் விடுத்த வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், எத்தனை இடத்தில் சோதனை செய்வீர்கள் என்று கேட்டதோடு, மிரட்டுகிறீர்களா? மிரட்டுமாறு உங்களிடம் யாராவது கூறி உள்ளனரா என்று தொடர்ந்து மிரட்டினார்.

பாஜக வேட்பாளர் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்காததோடு, காவல்துறை மற்றும் குழுவினரை வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்திற்கு அலைய விடுவேன் என்று மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மிரட்டல் விடுத்தது தொடர்பாக குன்னத்தூர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Views: - 148

0

0