ஜெய்ப்பூரில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று திரும்பிய தூத்துக்குடி மாணவியிடம் பாலியல் சீண்டல் : பரபரப்பு புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
17 February 2024, 4:59 pm
Harassment
Quick Share

ஜெய்ப்பூரில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று திரும்பிய தூத்துக்குடி மாணவியிடம் பாலியல் சீண்டல் : பரபரப்பு புகார்!

தூத்துக்குடி சோரீஸ்புரத்தை சார்ந்த துரைராஜ் – மங்கள ஈஸ்வரி இவர்களது 10ம் வகுப்பு படிக்கும் மகள் சிறு வயது முதலே தற்காப்பு கலையான டேக்வாண்டோவில் ஆர்வம் கொண்டு விளையாடி வருகிறார்.

தூத்துக்குடியை சேர்ந்த வின்னர் டேக்வாண்டோ தற்காப்பு கலை பயிற்சி நடத்தி வரும் பயிற்சியாளர் ராமலிங்க பாரதி என்பவரிடம் பயிற்சி பெற்றுள்ளார்.

இதை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 8, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொள்வதற்காக 9 பேருடன் திருவனந்தபுரத்திலிருந்து விமான மூலம் ஜெய்பூர் சென்றுள்ளார். மாணவர்களுடன் பயிற்சியாளராக ராமலிங்க பாரதி மற்றும் மற்றொரு பயிற்சியாளர் சர்மா ஆகியோர் சென்றுள்ளனர்.

பின்னர், போட்டியில் பங்குபெற்றுவிட்டு ரயிலில் திரும்பும்பொழுது உடன் வந்த சக மாணவனால் (ரிஷிகேஷ் – 11ஆம் வகுப்பு படிப்பவர்) பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டதாக அவரது பெற்றோர்கள் உடன் சென்ற சக மாணவர்களை அழைத்துக்கொண்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்று புகார் மனு அளித்தனர்.

ஏற்கனவே பயிற்சியாளர் ராமலிங்க பாரதி தனக்கு சாப்பாடு வழங்காமல் தாக்கியதாக கூறி கடந்த 3 தினங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்ட மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் நிலையில் தனது மகள் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சக மாணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது

Views: - 446

0

0