கட்சியில் இருந்து விலகிய இரண்டு கவுன்சிலர்கள்… அதிர்ச்சியில் திமுக : உற்சாகத்தில் அதிமுக!!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2023, 7:37 pm
EPS Vs Stalin -Updatenews360
Quick Share

கட்சியில் இருந்து விலகிய இரண்டு கவுன்சிலர்கள்… அதிர்ச்சியில் திமுக : உற்சாகத்தில் அதிமுக!!

ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 5-வது வார்டு கவுன்சிலர் கலையரசி மற்றும் 11-வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்த பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு தலா 7 கவுன்சிலர்களும், ஒரு சுயேட்சை கவுன்சிலரும் உள்ளனர். பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ராகிணியும், துணைத் தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த என்.ஆர்.சந்திரசேகரன் ஆகியோரும் உள்ளனர். இந்நிலையில் தற்போது 2 பேர் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளதால் பேரூராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றும் நிலை உருவாகி உள்ளது.

Views: - 215

0

0