மின்தடையால் ஒரே சிரமமப்பா..? அன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்… இன்று அமைச்சர் PTR.. பழனி கோவிலில் சிறிதுநேரம் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
17 December 2022, 9:39 pm
Quick Share

திண்டுக்கல் ; பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய சென்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரோப்காரில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சிறப்பு மற்றும் அறுவை சிகிச்சை துறை கட்டிடத்தில் பல்வேறு திட்டங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகு, 3வது தளத்திலிருந்து தரை தளத்திற்கு லிப்டின் மூலம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வந்து கொண்டிருந்தனர். அப்போது, மின்தடை ஏற்பட்டு திடீரென்று லிப்டின் இயக்கம் தடைபட்டது.

இதனால் அமைச்சர் மா.சுப்பிரமணியன் லிப்டில் சிக்கி கொண்டார். பின்னர், அமைச்சர் உள்பட அவருடன் இருந்தவர்கள் ஆபத்து கால கதவின் வழியே மீட்கப்பட்டனர். இதையடுத்து,சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் லிப்டுகளை சரியாக பராமரிக்காத என்ஜினீயர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய சென்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ரோப்காரில் சிறிது விநாடி அந்தரத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சென்ற அவர், அடிவாரத்தில் இருந்து மலைக்கு ரோப் காரின் மூலம் சென்றார். பாதி வழிக்கு ரோப் கார் சென்ற போது, திடீரென மின்தடை ஏற்பட்டதால், அவரது ரோப் கார் அந்தரத்தில் சிறிது வினாடி ரோப் கார் நின்றது. பின்னர், சிறிறு நேரத்தில் மின்சாரம் வந்த பிறகு மீண்டும் ரோப் கார் இயக்கப்பட்டது.

திமுக ஆட்சிக்கும், மின்தடைக்கும் ஏழாம் பொருத்தம் இருந்து வரும் நிலையில், அடுத்தடுத்து அமைச்சர்கள் மின்தடையினால் பாதிக்கப்பட்டிருப்பது தமிழகத்தில் பெரும் பேசு பொருளாகி விட்டது.

Views: - 303

0

0