4 நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன்.. நடிகை குஷ்பு போட்ட பரபரப்பு ட்வீட் : கைக்கோர்த்த அரசியல் பிரமுகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2022, 6:35 pm
Kushboo 1 - Updatenews360
Quick Share

80, 90களில் முண்ணனி கதாநாயகியாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் 1986ம் ஆண்டு வெளியான வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் குஷ்பூ. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடத்துள்ளார்.

இவருக்கு இவரது ரசிகர்கள் கோவில் வரை கட்டியுள்ளனர். சென்னையில் இவர் பெயரில் கிடைக்கும் குஷ்பூ இட்லி மிகப் பிரபலம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் 2000ம் ஆண்டு பிரபல இயக்குனநர் சுந்தர். சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திதா, அனந்திதா என்ற இரு மகள்கள் உண்டு.

தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வரும் இவர் அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார். ஆரம்பத்தில் திமுக, பின்னர் காங்கிரஸ் தற்போது பாஜகவில் இருந்து பொது சேவையாற்றி வருகிறார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ள குஷ்பு, கடந்த 4 நாட்களாகவே குஷ்பு எந்த ட்வீட்டும் செய்யாமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது அவரே ட்விட்டர் பக்கத்தில் பதிவையும் ஒன்றை போட்டுள்ளார்.

அதில், தனிப்பட்ட காரணங்களுக்காக நான் பொதுவெளியில் தலைக்காட்டாமல் இருந்ததற்கு காரணம், என்னுடைய மூத்த சகோதரர் உயிருக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

இன்று அவருடைய உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் அடைந்திருக்கிறது. அவருக்காக நீங்கள் எல்லோரும் வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் அவருக்கு வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இதையடுத்து அவரது ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் பலரும், பிரார்த்திப்பதாக கூறி வருகின்றனர். மேலும் பாஜக பிரமுகர்கள் ஏபி முருகானந்தம், சிபி ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் பிரமுகர் லட்சுமி ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் வேண்டிக்கொள்வதாக பதில் ட்விட் போட்டுள்ளனர்.

அரசியல் பிரமுகர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் வேண்டிக்கொள்வதாகவும், விரைவில் உங்கள் சகோதரர் குணமடைவார் என பாசிட்டிவ் மெசேஜ்களை அனுப்பி வருகின்றனர்.

Views: - 391

0

0