ஆட்டம், பாட்டத்துடன் தொண்டர்கள் ஆராவாரம்.. ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார் வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்..!!

Author: Babu Lakshmanan
25 March 2024, 1:32 pm
Quick Share

வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 27ம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்தி உள்ளிட்டோர் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக வேலூர் அண்ணா சாலையில் உள்ள வேலூர் மாநகர் திமுக அலுவலகத்தில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

தொடர்ச்சியாக ஊர்வலமாக சென்று அண்ணா சிலை, பெரியார் சிலை, காந்தி சிலை, அம்பேத்கர் சிலை மாலை அணிவித்துவிட்டு, சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக இண்டியா கூட்டணி தொண்டர்கள் ஆராவாரத்துடன் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வழிநெடுக்கும் பட்டாசுகள் வெடித்து, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என பல்வேறு மேல தளங்கள் இசைத்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு பொதுமக்களிடம் தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார் கதிர் ஆனந்த்.

Views: - 215

0

0