உடல் ரீதியாவும் மனரீதியாகவும் கஷ்டப்படுத்திட்டான்… காதலனால் மன உளைச்சலில் ஆண்ட்ரியா..!

Author: Vignesh
1 February 2024, 10:13 am
andrea jeremiah - updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் ஆண்ட்ரியா. இவர் முதலில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். வெஸ்டர்ன் பாடல்கள் பாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டும் ஆண்ட்ரியா படங்களில் மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.

தமிழில் தொடர்ந்து சில வெற்றிப்படங்களில் நடித்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா தமிழை தாண்டி தெலுங்கு படங்களிலும் பாட்டு பாடி உள்ளார். அத்துடன் வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன் மூலம் அவருக்கு மார்க்கெட்டும் உயர்ந்தது. இன்றளவும் சரிவை சந்திக்காமல் அப்படியே ஹிட் ஹீரோயின் என்ற இடத்தை தக்கவைத்திருக்கிறார் ஆண்ட்ரியா.

andrea jeremiah - updatenews360

இவரின் சிறந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது. ஆம், பிரபல அரசியல் வாரிசு நடிகரின் காதல் வலையில் சிக்கி ஏமாந்துவிட்டார். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஆண்ட்ரியா சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்கமால் இருந்து வந்தார்.

அதன் பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்கில் இறங்கி நடிப்பு, பாடல் என படு பிசியாக இருந்து வருகிறார். இதனிடையே, இசையமைப்பாளர் அனிருத்தை ரகசியமாக காதலித்தார். மேலும், ஆண்ட்ரியா நடிகர் தனுஷுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். ஆண்ட்ரியா இதற்கு முன்னர், அனிருத், கமல் ஹாசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவருடன் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

andrea jeremiah - updatenews360

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆண்ட்ரியா ஒரு கட்டத்தில் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று வருத்தப்பட்டதாகவும், தற்போது திருமணம் செய்து கொள்வதில் தனக்கு ஆர்வம் இல்லை என்றும், கடந்த சில வருடங்களில் திருமணம் செய்து கொண்ட சிலர் மகிழ்ச்சியாக இல்லை. நிறைய பேர் திருமணம் செய்து கொள்ளாமல் மகிழ்ச்சியாக தான் உள்ளனர். என்னுடைய காதலன் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்படுத்திய துன்பத்திலிருந்து இப்போதுதான் மீண்டு வருகிறேன். இந்த விஷயத்தால், மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். இதனால்தான் சினிமாவிலிருந்து சற்று விலகி இருந்தேன் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

Views: - 211

0

0