காசு வேணாம்.. நிர்வாணமாக நடிக்க தயார்.. பகிரங்கமாக அறிவித்த ஆண்ட்ரியா..!

Author: Vignesh
28 February 2024, 6:47 pm
Quick Share

தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் ஆண்ட்ரியா. இவர் முதலில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். வெஸ்டர்ன் பாடல்கள் பாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டும் ஆண்ட்ரியா படங்களில் மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.

Andrea-Jeremiah-updatenews360-1-5

தொடர்ந்து தமிழில் சில வெற்றிப்படங்களில் நடித்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா தமிழை தாண்டி தெலுங்கு படங்களிலும் பாட்டு பாடி உள்ளார். அத்துடன் வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன் மூலம் அவருக்கு மார்க்கெட்டும் உயர்ந்தது. இன்றளவும் சரிவை சந்திக்காமல் அப்படியே ஹிட் ஹீரோயின் என்ற இடத்தை தக்கவைத்திருக்கிறார் ஆண்ட்ரியா.

andrea jeremiah - updatenews360

இவரின் சிறந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது. ஆம், பிரபல அரசியல் வாரிசு நடிகரின் காதல் வலையில் சிக்கி ஏமாந்துவிட்டார். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஆண்ட்ரியா சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்கமால் இருந்து வந்தார். அதன் பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்கில் இறங்கி நடிப்பு, பாடல் என படு பிசியாக இருந்து வருகிறார்.

andrea jeremiah - updatenews360

இந்நிலையில் பிசாசு படத்தில் ஆடையின்றி சில காட்சிகளில் நடித்தது ஏன் என்றும், ஆடை ஆடையின்றி நடிக்க தயார் என்று கூறிய காரணம் என்ன என தற்போது, ஆண்ட்ரியா விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் அப்படி கூறியதை பார்த்து பலரும் ஷாக் ஆகிவிட்டார்கள். நான் ஒரு நடிகை என்பதால், அது என்னுடைய வேலை அதோடு, ஆடை இல்லா காட்சிகளில் நடிக்க நான் எதிர்பார்ப்பது பணம் கிடையாது என்றும், பலரும் பணத்திற்காக இப்படிப்பட்ட காட்சிகளில் நடிப்பார்கள். பணம் சம்பாதிக்க வேறு வழிகள் உள்ளன.

இப்படித்தான் படங்களில் ஆடையின்றி நடித்துதான் காசு சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆடையின்றி நடிக்க பணத்தை தாண்டி நல்ல காரணம் தேவை. அதில், இப்படி ஒரு விஷயம் நடக்கிறது என்றால், இப்படியான காட்சி அவசியம் தேவைப்படுகிறது. ஆனால், அதற்காக அந்த காட்சியை வம்படியாக கேட்டால், அது எனக்கு தெரிந்து விடும். படத்தின் கதை களத்திற்கு அந்த காட்சி அவசியம் என்றாலும், அதற்கான காரணத்தை அவர்கள் கொடுத்தாலும், நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று நடிகை ஆண்ட்ரியா வெளிப்படையாக பேசியுள்ளார்.

Views: - 85

0

0