தாலி கட்டும் நேரத்தில் ஷாக்.. அசோக் செல்வனை அதிர வைத்த கீர்த்தி பாண்டியன்..!

Author: Vignesh
28 September 2023, 4:30 pm
ashok selvan keerthi pandian
Quick Share

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.

ashok selvan

இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துக்கொண்டார்.

திருநெல்வேலியில் பசுமை திருமணம் செய்து கொண்ட ஜோடியான இவர்களுக்கு நிறைய விமர்சனங்கள் வந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உலக அழகி என்று கூறி கீர்த்தி பாண்டியனுடன் எடுத்த புகைப்படங்களை அசோக் செல்வன் பகிர்ந்து இருந்தார்.

keerthi pandian-updatenews360

இந்த நிலையில், கீர்த்தி பாண்டியன் – அசோக் செல்வன் இருவரும் பேட்டி ஒன்று கொடுத்து உள்ளனர். அதில், கீர்த்தி பாண்டியன் பேசும்போது, தனக்கு தாலி கட்டும்போது 3 முடிச்சியும் அசோக் செல்வனே போட வேண்டும் என்று அசோக் செல்வனிடம் தான் கட்டளை போட்டு இருந்தாகவும், அதேபோல் தான் அவரே தனக்கு 3 முடிச்சு போட்டு, தமிழ் மரபு முறைப்படி தங்கள் திருமணம் நடந்தது என தெரிவித்துள்ளார்.

Views: - 452

0

0