ஒண்டிக்கட்டையாக இருக்கும் கௌசல்யா.. அந்த நோய் குறித்து பேசிய பயில்வான்..!

Author: Vignesh
29 January 2024, 8:37 am
kausalya
Quick Share

அழகு புதுமையான, அமைதியான , பவ்யமான நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கௌசல்யா. தமிழ், கன்னட, தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய், கார்த்தி, பிரபுதேவா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.

kausalya - updatenews360

பெங்களூரில் பிறந்த இவர் பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்தும் திருமணமே எனக்கு வேண்டாம் என கூறி நிராகரித்துவிட்டார். தற்போது இவருக்கு வயது 45 என்பது குறிப்பிடத்தக்கது.

Kausalya - updatenews360

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற கௌசல்யா நான் திருமணத்தை எதிர்பார்ப்பவள் இல்லை என்றும், என்னுடைய கருத்திற்கு ஏற்ப பிடித்தமான ஒருவரை இன்னும் தான் சந்திக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஒருவர் மட்டும் என் வாழ்க்கையில் வந்தார்.

kausalya - updatenews360

ஆனால், சில காரணங்களால், பிரேக்கப் ஆகிவிட்டது. அந்த சமயத்தில் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தேன். மேலும், நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டு இதனால் நிறைய மாத்திரைகளை சாப்பிட்டதால் திடீரென உடல் எடை அதிகமாகி விட்டது.

Kausalya - updatenews360

இந்த விஷயத்தால், சினிமாவில் இருந்து விலகி விட்டேன். மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. எனக்கு விஜயுடன் சேர்ந்து நடித்த பிரியமுடன் படம் மிகவும் பிடித்த படம் விஜய் தான் என்னுடைய க்ரஷ் என்று கௌசல்யா தெரிவித்து இருந்தார்.

bayilvan ranganathan

இதுகுறித்து, பேசிய பயில்வான் கௌசல்யாவுக்கு இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லையா என்று தெரியவில்லை. நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டு இதனால் நிறைய மாத்திரைகளை சாப்பிட்டு வருவதால், இதுவரை அவர் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. இது பற்றி கேட்டால், இப்படியே போகட்டும் எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது திருமணம் செய்து கொள்கிறேன். இப்போதைக்கு திருமணத்தை தள்ளி வைக்கிறேன் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், சினிமாவை விட்டு காணாமல் போன கௌசல்யா இல்லற வாழ்க்கையும் விருப்பமில்லாமல் இப்படி தனிமையில் இருப்பதற்கான காரணம் இப்போதைக்கு அவருக்கு பாதுகாப்பு தேவையில்லை என்பது தான் என்றும் தெரிவித்துள்ளார்.

Views: - 257

1

0