நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. இத்தனை காலம் விலகியிருந்தது ஏன்? PERSONAL விஷயங்களை பகிர்ந்த பாவனா..!

Author: Vignesh
7 May 2024, 4:00 pm
bhavana-updatenews360
Quick Share

சித்திரம் பேசுதடி படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பாவனா. அறிமுக படத்திலேயே தனது நடிப்பால் பேசப்பட்ட அவருக்கு தொடர்ந்து ஜெயம் ரவியுடன் நடித்த `தீபாவளி’ திரைப்படம் புகழை தேடி தந்தது.

bhavana-updatenews360

மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந்தேதி ஷூட்டிங் முடித்துவிட்டு திரும்பும் போது திடீரென காரில் கடத்தப்பட்டு முகம் தெரியாத நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.

மேலும் படிக்க: சார் விட்டுருங்கன்னு சொன்னால்.. புலம்பித்தள்ளிய முத்தழகு சீரியல் நடிகை..!

பின்னர் இதன் பின்னணியில் இருப்பவர் நடிகர் திலீப் தான் என்று பாவனா கூறியதன் அடிப்படையில் போலீசார் நடிகர் திலீப்பை தீவிரமாக விசாரித்தார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேரோடும், புகழோடும் திகழும் பிரபல நடிகைக்கே இந்த நிலையா? சினிமா துறையில் என்னதான் நடக்கிறது? என்றே எல்லோரும் பேசினர்.

அதன் பின்னர் பல வருட இடைவெளிவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். நடிகர் திலீப்பும் தற்போது தமன்னாவுடன் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் திலீப் குறித்து பேசிய நடிகை பாவனா ” திலீப் பெற்ற அம்மாவையே மோசமாக பார்க்கும் விஷமி. அதனால் தான் அவர் என்னிடம் அப்படி நடந்துகொண்டார் என பாவனா வெறுப்பை காட்டி இருந்தார்.

bhavana

மேலும் படிக்க: கோவை சரளாவை ஆசை காட்டி மோசம் செய்த உச்ச நடிகர்.. பல வருடங்கள் கழித்து சொன்ன இயக்குனர்..!

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததில் சில ஆண்டு வெளியே வராமல் இருந்த நடிகை பாவனா அதிலிருந்து மீண்டு தற்போது, நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் கடந்த 2017 கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவர் உடன் நிச்சயம் செய்யப்பட்டு, 2018 ல் திருமணம் செய்து கொண்டார்.

bhavana

மேலும் படிக்க: நடிகையிடம் சில்மிஷம்?.. சிம்புவை வெளுத்து விட்ட டி.ராஜேந்தருக்கு நேர்ந்த கதி..!

இந்நிலையில், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் பாவனா சமீபத்தில் நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள நடிகர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், கிரீடம் என்ற பாடலின் பிரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது. அதில், லிப்லாக் காட்சி அமைந்துள்ளது. அப்பாடலில் நடிகை பாவானா டோவினோவுடன் காரில் லிப்லாக் கொடுக்கும் காட்சி அமைந்துள்ளது. நடிகை பாவனாவா லிப்லாக் கொடுப்பது என்று ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாவனா என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வந்தது. வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்பினார்கள். சிலருடன் இணைத்து பேசினார்கள். ஒரு கட்டத்தில் நான் உயிரோடு இருக்கும்போது இறந்து விட்டதாக வதந்திகளை உருவாக்கினார்கள். எனக்கு சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதால் அதிலிருந்து வெளியே வர சில காலம் நடிக்காமல் இருந்தேன். மேலும் நீங்கள் நினைப்பது போல இந்த விஷயத்தில் இருந்து நான் சாதாரணமாக வெளிவந்து விடவில்லை. அந்த சம்பவத்தால் சினிமாவை விட்டும் விலகி இருந்தேன். தற்போது, மீண்டும் பிஸியாக நடித்து வருகிறேன் என்று அவருடைய பர்சனல் விஷயங்களை வாகன தெரிவித்துள்ளார்.

Views: - 117

0

0

Leave a Reply