லைகா நிறுவனத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்த பார்த்திபன்… வாய் வச்சிட்டு சும்மா இருந்தா தானே!

Author: Shree
16 May 2023, 3:24 pm
parthiban
Quick Share

சினிமாவில் ஏதோ படங்கள் எடுக்க வேண்டும் என்று இல்லாமல் வித்தியாசமாக இதுவரை யாரும் முயற்சி செய்யாத விஷயங்களை செய்ய வேண்டும் என்று ஒரே குறிக்கோளோடு பார்த்திபன் படங்களை எடுப்பவர். தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமமான இவர் கே. பாக்யராஜிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தார். பின்னர் சில படங்களை இயக்கியும் படங்களில் நடித்தும் இருக்கிறார்.

அண்மையில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தின் விழாவில் பேசிய பார்த்திபன் சர்ச்சைக்குள்ளாகும் வகையில் பேசி லைகா நிறுவனத்தை பெரும் சிக்கலில் கோர்த்துவிட்டுள்ளார்.

ஆம், அதாவது, ” 1000 கோடிக்கு ரெய்டு செய்ய வேண்டும் என்றால் பொன்னியின் செல்வன் திரையரங்குகளுக்கு போங்க கண்டிப்பாக கிடைக்கும் என பலகோடி வசூலை வாரி குவிப்பதாக குறிப்பிட்டிருந்தார். அவரின் பேச்சால் அமலாக்கத் துறையினர் லைக்கா நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் தீவிர சோதனை செய்து வருகிறார்கள். இது மற்ற தயாரிப்பு நிறுவனங்களையும் அச்சுறுத்தியிருக்கிறது.

Views: - 803

6

2