எதிர்நீச்சல் மாரிமுத்து மரணத்திற்கு காரணம் இதுவா?.. பகீர் கிளப்பும் பிரபல அகோரி..!

Author: Vignesh
1 March 2024, 6:21 pm
marimuthu - updatenews360
Quick Share

பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சமீப நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர், இயக்குநர் மாரிமுத்து (57) ‘எதிர்நீச்சல்’ தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பல படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

அடுத்ததாக கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், சீரியல் ஒன்றிக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். அதன் பின்னர் அவரது சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு பாரம்பரிய முறைப்படி உறவினர்கள் முன்னைலையில் உடல் தகனம் செய்தனர்.

trending-saamiyar

இந்நிலையில், அகோரி கலையரசன் என்பவர் சமூக வலைதளங்களில் எதிர்நீச்சல் மாரிமுத்துவின் உயிரிழப்பு குறித்து பேசி உள்ளார். அதில், அவர் மாரிமுத்து உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஆனால், அது உண்மை இல்லை. அவருடைய மரணம் இயற்கையானது இல்லை. மாரிமுத்து ஒரு சீரியலில் நடித்திருந்தார். அந்த சீரியல் எல்லா வீடுகளிலும் ஓடக்கூடியது. அந்த சீரியலில் மாரிமுத்து பெண்களை திட்டியும் பெண்களை கொடுமைப்படுத்தும் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். இதனால், பலரும் அவரை இவனுக்கு ஒரு சாவு வராதாடா இப்படி பெண்களை டார்ச்சர் பண்றானே என்று அபசகுன வார்த்தைகளால் திட்டி இருப்பார்கள். அபசகுன வார்த்தைகளால் தான் மாரிமுத்து இறந்து போனார் என்று அகோரி கலையரசன் அடித்துச் சொல்கிறார்.

Views: - 106

0

0