மாதவிடாய் நேரத்தில் ரத்தம் சொட்ட சொட்ட உடலுறவு… துயர வாழ்க்கை நினைத்து கண்ணீர் வடித்த மிருணாள் தாகூர்!

Author: Shree
16 October 2023, 9:17 pm
mirnal thakur
Quick Share

பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது.

தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர இந்தியில் 2018ல் வெளியான லவ் சோனியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவரது நடிப்பில் வெளியான அப்படத்தில் மிருணாள் விலை மாதுவாக நடித்திருப்பார். இந்த ரோலில் நடிக்க பிரத்யேகமான நடிப்பு வரவேண்டும் என்பதற்காக அவர் உண்மையிலே விலைமாது பெண்களை சந்தித்து அவர்களின் அனுபவத்தை குறித்து கேட்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

நான் அந்த இடத்திற்கு போனதும் முதலில் அங்கிருந்த கட்டில்களை பார்த்து ஷாக் ஆனேன். சாதாரண கட்டில்களை விட மிக உயரமாக இருந்தது. இது ஏன் இப்படி என கேட்டதற்கு…. ” நாங்கள் கஸ்டமர்களுடன் உடலுறவில் இருக்கும்போது எங்கள் குழந்தைகள் இந்த கட்டிலுக்கு அடியில் படுத்து உறங்கிக்கொண்டிருப்பார்கள் என்றார்கள். அந்த பதில் என் மனதை உருக்குலைய செய்தது.

மேலும், உங்களை போன்ற பெண்கள் வருத்தப்பட்டோ அழுதோ நான் பார்த்ததே இல்லை. நீங்கள் இந்த தொழிலை சந்தோஷமாக தான் செய்கிறீர்களா? என கேட்டதற்கு, எங்களை போன்ற பெண்களுக்கு எந்த உணர்ச்சியும் இருக்காது. நாங்கள் அழக மாட்டோம், சிரிக்கமாட்டோம், கவலை படமாட்டோம் எங்களது வாழ்க்கை இப்படி தான் என ஆகிவிட்டது. இனி எங்களை காப்பாற்ற ஒருத்தரும் வரவப்போவதில்லை. நாங்கள் உயிருள்ள பிணங்கள்.

ஒரு நபருடன் உடலுறவு கொண்டால் ரூ. 40 கொடுப்பார்கள். நாள் ஒன்றிற்கு 30 முதல் 40 கஸ்டமரை ஒரு நாள் திருப்தி படுத்துவோம். சில ஆண்கள் மாதவிடாய் நேரத்தில் ரத்தம் சொட்ட சொட்ட கூட விடாமல் அவர்கள் உணர்ச்சியை அனுபவித்து விட்டு செல்வார்கள். இதெல்லாம் பார்த்து ஆரம்பத்தில் கத்தினோம், கதறினோம். பின்னர் இது தான் வாழ்க்கை என்று ஆனதும் மரத்துப்போச்சு. எங்களது உடலை விற்கிறோம் அதனால் எங்களை போன்ற பெண்களிடம் நீங்கள் எந்த உணர்ச்சியும் பார்க்கமுடியாது என அந்த விலைமாதுவின் கோரமான பதிலை கேட்டு நடிகை மிருணாள் தாகூர் பேட்டி ஒன்றில் கண்ணீருடன் கூறினார்.

Views: - 2794

98

61