மழையில் எடுத்த காட்சி.. அந்த ஆடையில்லாமல் சென்ற ஷோபனா.. ரஜினியால் தப்பிய மானம்..!

Author: Vignesh
11 May 2023, 11:47 am
rajini shobana-updatenews360
Quick Share

நடிகை ஷோபனா தளபதி, எனக்குள் ஒருவன், இது நம்ம ஆளு, போடா போடி என பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர். இப்போது நடிப்புக்கு சின்னதாக லீவ் போட்டு விட்டார். தற்போது சென்னையில் பரத நாட்டியப்பள்ளியும் நடத்தி வருகிறார் நடிகை ஷோபனா.

இதனிடையே, தமிழில் மட்டுமில்லாமல், மலையாளத்தில் இவர் மிக பிரபலமான நடிகை, Infact ரஜினி, ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தை ஏற்று, தேசிய விருது வாங்கியவர் ஷோபனா தான். தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலப் படங்களில் மேலதிகமாக கிட்டத்தட்ட 230 படங்களில் நடித்துள்ளார். 

rajini shobana-updatenews360

இவர் பழம்பெரும் நடிகை பத்மினியின் சொந்தகாரர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவருக்கு 53 வயதாகிறது, இருந்தும் தற்போதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை, ஆனால் 23 ஆண்டுகளாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார்.

rajini shobana-updatenews360

அந்த வகையில், முன்னதாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஷோபனா நடிப்பில் வெளியான தளபதி, சிவா என இரண்டு படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு படங்களுக்கும் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

rajini shobana-updatenews360

மேலும், சிவா படத்தில் ஷோபனா மற்றும் ரஜினி நடித்து வந்த போது மழையில் எடுக்க இருந்த ஒரு பாடல் காட்சியை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த விஷயம் ஷோபனாவுக்கு சொல்லவில்லையாம். அன்று ஷோபனாவிடம் உதவியாளர் வெள்ளை நிற சேலையை கொடுத்து இருந்தார். இதனை பார்த்த ஷோபனா அதிர்ச்சி அடைந்து உள்ளார். ஏனெனில் நடிகை சோபனா அந்த ஆடைக்கு தகுந்த உள்ளாடைகளை கொண்டுவரவில்லையாம்.

இறுதியாக, ஷோபனா பிளாஸ்டிக் கவர் எடுத்து கட்டி கொண்டு சென்றாராம். அந்த பாடலின் படப்பிடிப்பில் ரஜினி ஷோபனாவை கட்டிப்பிடிப்பது போன்ற காட்சி எடுக்க பட்ட போது, ரஜினி கட்டிப்பிடித்ததும் கவர் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சி ஆகிவிட்டாராம்.

இதனையடுத்து, நடிகை ஷோபனா ரஜினியிடம் இந்த விஷயத்தை பற்றி யாரிடமும் சொல்லாதீர்கள் என் மானம் போய்விடும் என்று தெரிவித்ததாக பேட்டி ஒன்றில் ஷோபனா தெரிவித்துள்ளார்.

Views: - 667

3

1