படுத்ததுக்கு Proof இருக்கான்னு கேட்கிறார்… நடிகை விஜயலக்ஷ்மி கண்ணீர் பேட்டி!

Author: Shree
29 August 2023, 3:26 pm
vijayalakshmi seeman
Quick Share

நடிகர் விஜய், சூர்யா நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிகை விஜயலட்சுமி நடித்து பிரபலமானார். இவர் கன்னட நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து, பூந்தோட்டம், கலகலப்பு, பிரண்ட்ஸ், மிலிடரி, பாஸ் என்கிற பாஸ்கரன், தம்பி கோட்டை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர் பிரபல கன்னட நடிகர் ஸ்ருஜன் லோகேஷ் என்பவரை மூன்று ஆண்டுகள் காதலித்து டேட்டிங் செய்துவந்தார். அவரை திருமணம் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்ட விஜயலக்ஷ்மி 2007ம் ஆண்டு திருமணம் செய்துக்கொள்வதாக திட்டமிட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த திருமணம் நின்றுவிட்டது.

இதையடுத்து கடந்த சில வருடங்களாக விஜயலட்சுமி சில பிரச்சனைகளை சந்தித்து வந்தார். அதாவது, நாம் தமிழர் கட்சியில் தலைவர் சீமானை தன்னை காதலித்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்துவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இந்த விவகாரம் ஒரு முடிவில்லாமல் செல்கிறது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயலக்ஷ்மி, சீமான் தண்னி திருமணம், செய்துவிட்டு ஏமாற்றியதாகவும். இதை வெளியில் சொல்லியதால் அவரது ஆதரவாளர்கள் தண்ணனை மிரட்டுவதாகவும் புகார் கூறினார். இதனால் விஜயலட்சுமி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதன் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாலை மாற்றி விஜயலட்சுமியை சீமான் திருமணம் செய்து கொண்டார். பெரியார் கொள்கையை பின்பற்றுவதாலும், கிறிஸ்துவர் என்பதாலும் தாலி கட்டும் பழக்கம் இல்லை என்று சீமான் அப்போது தெரிவித்தார். சென்னையில் பிரபாகரன் தலைமையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், அதனால் திருமணம் குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் சீமான் தெரிவித்தார்.

நான் மனைவி, கயல்விழியை துணைவி என்று சீமான் கூறியதாக தெரிவித்தார். தொடர்ந்து, எனக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை, இப்போது இங்கே வந்து நிற்கிறேன் எனக் கூறிய நடிகை விஜயலட்சுமி பேசுகையில்‌, “என்னை ஏமாற்றிய சீமானை கைது செய்ய வைக்காமல்‌ விடமாட்டேன்‌. சீமானை கைது செய்யும்வரை போராட்டம்‌ தொடரும்‌” எனத்‌ தெரிவித்தார்‌.

தொடர்ந்து, பத்திரிகையாளரின் கேள்விகளால் கடுப்பான விஜயலக்ஷ்மி, சீமான் கேவலமானவர் தான்.. நான் கை பிடித்ததற்கு Proof இருக்கானு கேப்பாரு… படுத்ததற்கு Proof இருக்கானு கேப்பாரு…. நீங்க கேட்காதிங்க, என அவர் கூறிய போது, யாரும் அப்படி கேட்கவில்லை என்று செய்தியாளர் ஒருவர் கூறிய பதிலுக்கு, “நீ வாயை மூடுடா… நீ ஏன்டா பேசுற… பேசாதடா,” என ஒருமையில் பேசி திட்டினார் நடிகை விஜயலட்சுமி.

Views: - 409

0

0