நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு 5ம் தேதி தமிழகம் வருகை
1 December 2020, 7:55 pmசென்னை : நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு வரும் 5ம் தேதி தமிழகம் வருகிறது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று புயலாக மாறியது. நிவர் எனப் பெயரிடப்பட்ட இந்தப் புயல் கடந்த வாரம் புதுச்சேரி – கடலூர் இடையே கரையை கடந்தது. இதனால், தமிழகத்திலும் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதன் காரணமாக, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் குளம் போல் தேங்கி நின்றன. தமிழக அரசு சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஒரு சில இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், நிவர் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் 5ம் தேதி மத்திய குழு சென்னை வருவதாக வருவாய்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகம் வரும் 7 பேர் கொண்ட குழு கடலூர் மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்க உள்ளது.
0
0