நேர்மையா வாழ வழியில்லையா? இனி நா எங்க போவேன் : ஆட்சியர் அலுவலகத்தில் குளிர்பானத்தில் விஷம் அருந்திய இளைஞரால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2022, 2:50 pm
Karur Youth Try Suicide -Updatenews360
Quick Share

கரூர் : கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்திய இளைஞரை போலீசா மீட்டு தற்கொலை கடிதத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தென்னிலை பகுதிக்கு உட்பட்ட அவுத்திபாளையம் ஊரில் வசித்து வருபவர் இளைஞர் நல்லசிவம்.

இவருக்கு சொந்தமான தோட்டத்தை, அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர் தனது இடம் எனக் கூறி ஆக்கிரமித்துக் கொண்டதால் கடந்த ஒரு வருட காலமாக மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கும், காவல் நிலையத்திற்கு அலைந்து எவ்விதபயனும் இல்லாத காரணத்தினால், இன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் மன விரக்தியில் குளிர்பானத்தில் பூச்சி மருந்தை கலந்து விஷம் அருந்தியுள்ளார்.

இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள்ளேயே இளைஞர் ஒருவர் விஷம் அருந்திய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த இளைஞர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் வாழ வழி இல்லை இருப்பதற்கு இடமும் இல்லை, அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று ஒரு கடிதம் எழுதி வைத்து பின்னர் இதனை நிகழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 535

0

0