ரயில் மோதி மீண்டும் ஒரு பெண் யானை பரிதாபமாக உயிரிழப்பு ; வாளையாறு அருகே நிகழ்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
14 October 2022, 10:19 am
Quick Share

கேரளா மாநிலம் கஞ்சிக்கோடு- வாளையாறு இடையே 512 வது கிலோ மீட்டரில் ரயில் அடிபட்டு பெண் யானை உயிரிழந்தது.

பாலக்காடு – வாளையாறு – மதுக்கரை இடையே உள்ள ரயில்வே பாதைகளை கடக்கும் காட்டு யானைகள் மீது ரயில் மோதி உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி தொடர்ந்து வருகிறது. இதில் தமிழக எல்லைகளில் நிகழும் ரயில் – யானை மோதல் சம்பவங்கள் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

elephant - updatenews360

மேலும் வேகக்கட்டுப்பாடு சோலார் விளக்கு, ஒலி எழுப்பி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

elephant - updatenews360

இந்நிலையில் கேரளா எல்லை வாளையாறு அருகே விரைவு ரயில் மோதி மீண்டும் ஒரு பெண் யானை உயிரிழந்துள்ளது. கேரளா வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Views: - 370

0

0