‘இதுக்கு பேசாம செத்துப்போ’… குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவிகளை திட்டும் பெண் வாத்தி ; பொற்றோருடன் மாணவி புகார்!!

Author: Babu Lakshmanan
6 January 2023, 10:42 am
Quick Share

மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவிகளை செத்துப் போ என்று திட்டும் கணித பாட ஆசிரியை மீது பெற்றோர்களுடன் மாணவி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 1500 மாணவிகள் படித்து வருகிறார்கள். நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகளை பார்த்து, கணித பாடம் நடத்தும் ஆசிரியை அனிதா, “தூக்கு போட்டு செத்துப் போ, உன் பிணத்தை உன் பெற்றோரிடம் கொடுத்து விடுகிறேன்,” என்று திட்டியதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக வீட்டுக்கு சென்ற மாணவி மன உளைச்சலில் இருந்ததாக பெற்றோர் தரப்பில் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவியுடன் பள்ளிக்குச் சென்று பள்ளி தலைமை ஆசிரியையிடம் புகார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியயை துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோர்களிடம் உத்தரவாதம் கொடுத்த நிலையில், பெற்றோர்கள் பள்ளியிலிருந்து கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கணித ஆசிரியை அனிதா கூறியதாவது :- செத்துப் போ என்று கூறியிருப்பேன். இந்த மார்க் எடுப்பதற்கு செத்துப்போ.. என்று கூறியிருப்பேன். அதையெல்லாம் பெருசாக எடுத்து இருக்கக் கூடாது. நான் பயங்கரமாக அடிப்பேன். அதேபோல், அரவணைப்பேன், என்று அந்த ஆசிரியை கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

தலைமை ஆசிரியையிடம் புகார் கொடுத்த பெற்றோர் கூறியதில், குழந்தைகளை கஷ்டப்பட்டு தான் பள்ளிக்கு அனுப்புகிறோம். இங்கு ஆசிரியர்கள் நடத்தும் விதம் மாணவிகள் மன உளைச்சல் ஏற்பட்டு இருந்து வருவதாக தெரிவித்த அவர்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க விட்டால் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி பள்ளி வளாகத்தின் முன்பு அமர்ந்து போராட்டம் செய்யப் போவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Views: - 404

0

0