வேறு எந்தத் துறையிலும் இலக்கு நிர்ணயிக்கல… சாராயத்தில் மட்டும் தான் இலக்கு ; இதுதான் திராவிட மாடல்… அன்புமணி விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
4 September 2023, 8:32 pm
Quick Share

ஓரே நாடு ஓரே தேர்தல் முன்னாள் குடியரசுத்தலைவரின் தலைமையிலான குழுவின் அறிக்கையை அடுத்து பா.ம.க நிலைப்பாட்டை அறிவிப்போம் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

ஈரோடு திண்டலில் தமிழக அளவில் இறகுப்பந்து போட்டியின் இறுதி போட்டியை தமிழக இறகுப்பந்து கழக தலைவரும் , பா.ம.க தலைவருமான அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது :- காவிரியில் கடந்த ஆண்டு 620 டிஎம்.சிசி வீணாக கடலில் கலந்ததாகவும், நீருக்காக கர்நாடக , ஆந்திரா , கேரளாவுடன் போராடி வருவதாகவும் , இனி வரும் காலங்களில் காவிரியில் தண்ணீருக்காக கர்நாடகவுடன் சண்டை போட வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும் , நீரை சேமிக்க தவறியதாகவும் காவிரி – தாமிரபரணி் ஆறுகளை இணைக்க வேண்டும் , இது அவசியமான திட்டம் என்றும் , இன்றைய சூழ்நிலையில் நீர் மேலாண்மைக்கு மிக மிக முக்கியமான திட்டம் என்றார்.

கர்நாடகா காவிரியில் தண்ணீர் தர மறுப்பது , மேகதாது அணை கட்டுவது என கூறுவது கண்டித்தக்கது என்றவன்புமணி ராமதாஸ் காவிரி படுக்கையிலுள்ள அணைகள் அனைத்தும் காவிர மேலாண்மை ஆணையத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.நொய்யல் ஆறு அல்ல என்றும் அது ஒரு சாக்கடை், அதை மீட்டெக்க வேண்டும், என்றார்.

தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், நூல் விலை உயர்வால் கொங்கு பகுதியில் 70 % விசைத்தறிகள் மூடப்பட்டுள்ளதாகவும், நூல் விலையை குறைக்க மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். கொள்ளிடம் ஆற்றில் பா.ம.க சார்பில் 10 தடுப்பணை கேட்டால், அரசு 10 மணல் குவாரிகளை திறக்கிறது என்றும், NLC தமிழகத்தின் பிரச்சனை என்ற அன்புமணி ராமதாஸ், NLC இதுவரை 37 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை அழித்து உள்ளது என்றும், திமுகவை விவசாயகளின் எதிரியாகவே பார்க்கிறேன், என்றார்.

தஞ்சை டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி கருகி கொண்டு இருப்பதாகவும், உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு கொடுத்தால் தான் குறுவை காப்பாற்ற முடியும், என்றார். 1952 ,1957, 1962 ,1967 ஆகிய ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடைபெற்றது என்றும், ஒரே தேர்தலில் உள்ள சாத்தியக கூறுகளை ஆராயனும் வேண்டும் என்றும், அதேநேரம் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறையாக இருக்கிறது என்ற அன்புமணி ராமதாஸ், ஒரே நாடு ஓரே தேர்தல் முன்னாள் குடியரசுத்தலைவரின் தலைமையிலான குழுவின் அறிக்கையை அடுத்து பா.ம.க நிலைப்பாட்டை அறிவிப்போம், என்றார்.

பா.ம.க கடந்த 6 மாதமாக தேர்தல் பணிகளை செய்து வருவருதாகவும், கூட்டணி குறித்து விரைவில் எங்களது முடிவை அறிவிப்போம் என்ற பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் 2026 ல் கண்டிப்பாக கூட்டணி ஆட்சி தான், என்றார்.
ஆளுநர் நீட் தேர்வில் தனிப்பட்ட கருத்தை திணிக்கக்கூடாது என்றும், அவர் நீதிபதி போன்று நடுநிலைமையானவர் என்றும், சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேற்றினால் ஆளுநர் மசோதாவில் கையெழுத்திட வேண்டும், என்றார்.

போதை பொருள் விற்பவர்கள் மீது கட்சி பேதமின்றி குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அன்புமணி ராமதாஸ், மதுவிலக்கு துறை அமைச்சர் அல்ல மது விற்பனைத்துறை அமைச்சர் என்றும், இந்தாண்டு மது விற்பனை மூலம் 45 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு என்றும், அடுத்த ஆண்டு 55 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், மற்ற துறைகளில் இலக்கு நிர்ணிக்காத தமிழக அரசு, மது விற்பனையில் மட்டுமே இலக்கு நிர்ணியப்பது தான் திராவிட மாடல்இ என்றார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என வாக்குறுதி கொடுத்து, தற்போது போராட்டத்தை நடத்துவதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Views: - 223

0

0