தமிழகத்தில் பாஜகவை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்… ஆட்சிக்கே வந்தாலும் பாஜகவுக்கு ஆதரவு கிடையாது : திண்டுக்கல் சீனிவாசன்!!

Author: Babu Lakshmanan
1 February 2024, 4:44 pm
Quick Share

தமிழகத்தில் பாஜகவை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்று திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சூளுரைத்துள்ளார்.

திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில் :- தமிழகத்தில் பிஜேபியை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம், எனக் கூறினார்.

ஓபிஎஸ் மற்றும் பிஜேபி ஆதரவு காரணமாக தான் நான்கரை ஆண்டு காலம் தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி செய்தார் என ஓபிஎஸ் கூறியது தொடர்பாக கேட்ட கேள்விக்கு :- எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு இருந்ததால் தான் அதிமுக வேட்டி கட்டி அதிமுக கொடியை பயன்படுத்தி ஆம்பளையாக ஓபிஎஸ் வெளியே வந்தார். தற்பொழுது தெய்வத்தின் தண்டனையாக அதிமுக வேட்டியை கூட அவரால் கட்ட முடியவில்லை. இது தெய்வம் தந்த தீர்ப்பாகும்.

ஓ பன்னீர்செல்வம் பேசுவதெல்லாம் ஒரு பொருட்டு கிடையாது. தமிழகத்தில் எங்களுக்கு போதுமான அளவு எம்எல்ஏக்கள் இருந்ததால் தான் நான்கரை ஆண்டு காலம் நாங்கள் ஆட்சி செய்தோம். ஓ பன்னீர்செல்வமோ, மற்றவர்களோ (பாஜக ) யாரும் எங்களுக்கு யாரும் ஒன்றும் செய்யவில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி உரிய நேரத்தில் அறிவிப்பார். தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். அதன் பின் மத்தியில் தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ, அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கு தான் எங்களது ஆதரவு, எனக் கூறினார்.

மத்தியில் மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு உங்களுடைய ஆதரவு உண்டா என்ற கேள்விக்கு :- பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் எங்களுடைய ஆதரவு கிடையாது என பேசினார்.

Views: - 236

0

0