ஆன்லைன் ரம்மியால் தொடரும் தற்கொலைகள்… ரூ.15 லட்சத்தை இழந்த நபர் தூக்கு போட்டு தற்கொலை

Author: Babu Lakshmanan
28 July 2022, 1:05 pm
Online_Rummy_Poker_Ban_Andhra_UpdateNews360
Quick Share

தருமபுரி : தருமபுரியில் ஆன்லைன் ரம்மியால் 15 லட்சத்தை இழந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் பணத்தை சம்பாதித்து விடலாம் என்ற விளம்பரமும், ஆசையையும், அடுத்தடுத்து மரணங்களை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இதுவரைக்கும் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதிலும், ஆன்லைன் ரம்மியால் ரூ. 20 லட்சத்தை இழந்த கோவை போலீஸ்காரர் காளிமுத்து கடந்த 15-ம் தேதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, மனித உயிர்கொல்லியான ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், இதற்காக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூ. 15 லட்சத்தை இழந்த பிரபு என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் தமிழகத்தை மீளா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 741

0

0