பிரமாண்ட இயக்குனரால் தினமும் கண்ணீர் விட்டு கதறிய ஜெனிலியா.. உண்மையை உடைத்த நடிகர்..!

Author: Vignesh
7 June 2023, 4:30 pm
genelia-updatenews360
Quick Share

ஜெனிலியா டிசௌசா, தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கினார்.

genelia-updatenews360

அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் இடையே காதல் மலர, கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர் தமிழில் கடைசியாக தளபதி விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருந்தார். இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

genelia-updatenews360

அவ்வப்போது, சமூக வலைதளங்களில் சில க்யூட் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், சமீப காலமாக, உடலை ஃபிட் ஆக வைத்துக்கொள்வதில் அதீத ஆர்வம் செலுத்தி வரும் இவர், போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

genelia-updatenews360

சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற சித்தார்த் பாய்ஸ் படத்தில் நடந்த பல சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார். அதில் சித்தார்த், ஜெனிலியா தினமும் டயலாக் பேப்பரை பார்த்து அதிர்ச்சி அடைவர். தான் அவருக்கு வசனங்களை எல்லாம் தமிழில் சொல்லி தருவேன் என்று தெரிவித்துள்ளார்.

siddharth-updatenews360

ஒருமுறை இயக்குனர் ஷங்கர் இரண்டு பக்க கடினமான வசனத்தை ஜெனிலியாவிடம் கொடுத்துவிட்டார். அப்போது அதை பார்த்த உடனேயே ஜெனிலியா அழ துவங்கிவிட்டதாகவும், இதையடுத்து சித்தார்த், அவரை சமாதானம் செய்து வசனங்களை சொல்லி கொடுத்தேன் என்று தெரிவித்து உள்ளார்.

Views: - 491

1

2