பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக்கொலை : GANGSTERS-க்குள் ஏற்பட்ட தகராறு..? சேலத்தில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
7 February 2023, 11:47 am
Quick Share

சேலத்தில் பிரபல ரவுடியை ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆனந்தன். இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், காட்டூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி உறவினர் பிரபாகரன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆனந்தன், இரவு 11 மணிக்கு அங்கிருந்து திரும்பியுள்ளார்.

அப்போது, காட்டூர் சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்தபோது, வழிமறித்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களால் தாக்கி தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்து விட்டு, அங்கிருந்து கார் மூலம் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் மாநகர காவல் ஆணையாளர் லாவண்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். காயமடைந்த பிரபாகரன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தன் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் ரவுடி ஆனந்தன் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா..? கொலை செய்யப்பட்ட கும்பல் யார்..? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 670

0

0