குமரி முக்கடல் அணையை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு
20 November 2020, 4:54 pmQuick Share
கன்னியாகுமரி: குமரி முக்கடல் அணையை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
குமரி மாவட்டத்தில் பருவமழை தொடங்கி கடந்த ஒரு வாரமாக பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நேற்று முன்தினம் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று முக்கடல் அணையை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள அறிவியல் பூங்கா , கலையரங்கம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். அருகில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித் உள்ளார்.
Views: - 0
0
0