பிரசவத்திற்காக வந்த பெண்ணின் வயிற்றில் ஊசியை வைத்து தைத்த மருத்துவர்: ஆட்சியரிடம் கணவர் புகார்
Author: kavin kumar2 November 2021, 6:20 pm
தஞ்சை: பிரசவத்திற்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் மனைவி வயிற்றில் ஊசியை வைத்து தைத்துவிட்டதால் தனது மனைவி இறந்துவிட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் மனைவியை இழந்த கணவர் புகார் அளித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்துள்ள இளங்கார்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி விஜயகுமார், இவர் தனது பட்டதாரி மனைவி லட்சுமியின் இரண்டாவது பிரசவத்திற்க்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 18 ம் தேதி சேர்த்துள்ளார்.அறுவை சிகிச்சை மூலம் லட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் டிஸ்சார்ஜ் செய்து லட்சுமியை வீட்டிற்கு அழைத்து சென்ற பிறகும் லட்சுமிக்கு வயிற்றில் வலி இருந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்த மருத்துவரும், செவிலியரும் லட்சுமியின் வீடு தேடு சென்று லட்சுமிக்கு இன்னும் சில தினங்கள் சிசிச்சை அளித்திட வேண்டும் என்று கூறி மீண்டும் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
பிரசவமான லட்சுமி வயிற்றுவலி அதிகமானதையடுத்து கடந்த மாதம் 22 ம் தேதி இறந்துவிட்டார்.
இந்நிலையில்,இறந்துபோன லட்சுமியின் ஸ்கேன் ரிப்போர்ட்டில் வயிற்றில் ஊசி (சிரஞ்ச்) இருப்பது தெரியவந்ததும்,
இன்று உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த லட்சுமின் கணவர் விஜயகுமார் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் தனது மனைவியின் வயிற்றில் ஊசியை வைத்து தைத்துவிட்டதாகவும், அதனால்தான் தனது மனைவி இறந்துவிட்டதாகவும் புகார் கூறியவர், தனது மனைவி இறப்புக்கு காரணமான மருத்தவர்கள், செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும், குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிடவும் வலியுறுத்தினர்.
0
0