குஷ்பு வராமல் இருந்திருந்தால்…. அந்த தங்கமான நடிகையை திருமணம் செய்திருப்பேன்!

Author: Shree
19 April 2023, 9:49 am
sundhar c
Quick Share

தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.

இயக்குனர் சுந்தர் ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியிருக்கிறார். இன்றும் தொடர்ந்த கமர்ஷியல் படங்களை தந்து கொண்டிருக்கும் அவர் ஆரம்ப காலத்தில், மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்து பின்னர் “முறை மாமன்” என்ற நகைச்சுவைத் திரைப்படம் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார்.

.உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் ஆகிய திரைப்படங்கள் இவருடைய இயக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் பிரபல நடிகர்களான கார்த்திக், பிரசாந்த், அர்ஜூன், சரத்குமார், மற்றும் அஜித்குமார் ஆகியோருடைய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், தன் படங்களில் நடித்த நடிகைகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக்கொண்டார். அப்போது மறைந்த நடிகை சௌந்தர்யா குறித்து பேசிய அவர், எனக்கு மிகவும் பிடித்தமான நடிகை சௌந்தர்யா… எவ்வளவு பிடிக்கும் என்றால், இதுவரை நான் எங்கும் சொன்னதில்லை.

என் வாழ்க்கையில் ஒருவேளை குஷ்பூ வரவில்லை என்றால், நான் சௌதர்யாவிடம் என் காதல் சொல்லிருப்பேன். காரணம் அவங்க அவ்வளவு தங்கமான குணம் கொண்ட பெண். இன்னொரு விஷயம் சொல்கிறேன். சௌந்தர்யா தன் அண்ணன் மீது அதிகம் பாசம் வைத்திருந்தார். அவரை விட்டு எங்குமே நகரமாட்டார். இருவருமே ஒன்றாகத்தான் மரணமடைந்தனர்” என்று சுந்தர் சி அவர் கூறினார்.

Views: - 279

2

1