செங்கல்பட்டு 406…கோவை 389… மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு நிலவரம்..!
22 August 2020, 7:33 pmசென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏறி, இறங்கி வரும் நிலையில், மாவட்ட வாரியான பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. வந்தது. இன்று 5,980 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,73,410 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் சென்னையில் 1,294 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டில் 406 பேருக்கும், கோவையில் 389 பேருக்கும், கடலூரில் 389 பேருக்கும், திருவள்ளூரில் 384பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியான பாதிப்பு விபரத்தை தற்போது காணலாம்..!