லாட்ஜில் ஜோராக நடந்த விபச்சாரம்.. அரைகுறை ஆடையுடன் இருவர் தப்பியோட்டம்… 3 அழகிகள் மீட்பு… ஒருவர் கைது!!
Author: Babu Lakshmanan8 January 2022, 8:01 pm
கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடத்திய வந்ததை கண்டுபிடித்த போலீசார் 3 அழகிகளை மீட்டுள்ளனர்.
கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் வெளியில் இருந்து பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் நடப்பதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையில் போலீசார் அந்த லாட்ஜூக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது, அந்த லாட்ஜில் உள்ள ஓரு அறையில் 3 வாலிபர்கள் 3 இளம்பெண்களுடன் அரைகுறை ஆடையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அப்போது, அங்கு இருந்த 2 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் அங்கு இருந்த 3 இளம்பெண்களை மீட்டனர். அவருடன் இருந்த நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட இளம் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0
0