13 மாவட்டங்களில் மட்டுமே இரட்டை இலக்கு பாதிப்பு : தமிழகத்தில் இன்று 514 பேருக்கு கொரோனா!!
3 February 2021, 6:57 pmசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 600க்கு கீழ் குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது
படிப்படியாக குறைந்து வரும் தொற்றின் எண்ணிக்கை 600த்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்று 514 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,39,866 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,371 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 533 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 23 ஆயிரத்து 001 ஆக அதிகரித்துள்ளது.
0
0