கோவை மக்களே உஷார்…இன்னைக்கு மழை வெளுத்து வாங்கப்போகுதாம்: வெதர் மேன் அலர்ட்..!!
Author: Aarthi Sivakumar2 October 2021, 11:15 am
கோவை: கோவையில் இன்று மதியம் முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
கோவையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த மாதத்தில் வானிலை ஆய்வு மையம் கொடுத்த பல அறிவிப்புகள் பொய்த்துப்போக, கோவை இருகூரை சேர்ந்த வானிலை ஆர்வலரான கோயம்புத்தூர் வெதர்மேன் என்று அழைக்கப்படும் சந்தோஷ் கிருஷ்ணன் வானிலை குறித்து கொடுத்த அறிவிப்புகள் பலவும் துல்லியமாக இருந்தது.
இந்நிலையில் அவர் புதிதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கோவை மற்றும் மேற்கு மண்டல மாவட்டங்களில் அக்டோபர் 6ஆம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது.
இன்றும் கோவை உட்பட மேற்கு மண்டல மாவட்டங்களிலும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மதியம் முதல் நள்ளிரவு வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதற்கு ஏற்ப தயாராக இருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
0
0