பலத்தபாதுகாப்புடன் 1140 வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
27 November 2020, 6:50 pmQuick Share
வேலூர்: வேலூர் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 1140 வாக்குபதிவு இயந்திரங்கள் பலத்தபாதுகாப்புடன் கிருஷ்ணகிரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் பாதுகாப்பாக 1140 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது அவைகள் இன்று தலைமை தேர்தல் அலுவலர் அவர்களின் உத்தரவுக்கு இணங்க அரசியல் கட்சியினர் முன்னிலையில் வைக்கப்பட்டிருந்த இடம் திறக்கப்பட்டு காஞ்சிபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பிரித்து அனுப்பப்படுகிறது. பலத்த பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் இந்த வாக்குபதிவு இயந்திரமானது கொண்டு செல்லப்பட்டது.
Views: - 0
0
0