தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு உதவும் சில டிப்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
14 January 2023, 5:51 pm
Quick Share

கர்ப்ப காலம் என்பது ஒரு வித்தியாசமான அனுபவம் ஆகும். இது மகிழ்ச்சியை அளித்தாலும், கவனத்துடன் கையாள வேண்டிய ஒரு பயணம். பிரசவத்திற்கு பிறகு குறைந்தபட்சம் ஒரு வருடமாவது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். தாய்ப்பால் கொடுப்பது எப்பொழுதும் எளிதானது அல்ல. தாய்ப்பாலானது எளிதில் ஜீரணிக்கக்கூடியது மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக உங்கள் குழந்தையை பாதுகாக்கிறது.

இதன் விளைவாக, குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது குறைவான நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன.
தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் ஏராளமான நன்மைகளை அளிக்கிறது. கர்ப்பத்திற்கு பிறகு ஏற்படும் எடை அதிகரிப்பை சமாளிக்க உதவும். ஏனெனில் தாய்ப்பால் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. இது உங்கள் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தையும் குறைக்கலாம்.
பிரசவத்திற்குப் பிறகு, தாய்ப்பாலூட்டுவது ஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. இது கருப்பை அதன் கர்ப்பத்திற்கு முந்தைய நிலைக்குத் திரும்ப உதவுகிறது.

கூடுதலாக, தாய்ப்பால் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க உதவுகிறது. சரியான முறையில் தாய்ப்பால் கொடுப்பது, குழந்தையின் ஆரோக்கியத்தை சாதகமாகப் பாதிக்கிறது

தாய்ப்பாலின் தரம் தாயின் உணவைப் பொறுத்தது. நீங்கள் உண்ணும் உணவுகளின் நிறங்கள், காய்கறிகளில் உள்ள இயற்கையாக நிகழும் நிறமிகள், மூலிகைச் சத்துக்கள் அல்லது உணவுகளில் சேர்க்கப்படும் உணவுச் சாயங்கள் காரணமாக தாய்ப்பால் வேறு நிறமாக மாறக்கூடும். அதேபோல், உங்கள் உணவில் உள்ள சுவைகள் உங்கள் பாலில் பிரதிபலிக்கும். எனவே தாய்மார்களே, உங்கள் உணவைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருங்கள்.

Views: - 389

0

0