சளி, காய்ச்சல் இருந்து உடனே அரசு மருத்துவமனையை அணுகவும் : அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவுறுத்தல்!!
20 August 2020, 1:52 pmகோவை : சளி காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் கொரோனா நோய் தொற்று தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகர காவல்துறை ஆணையாளர் சுமித் சரண், கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் ஜடாவத் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அரசு மருத்துவமனை உள்ளிட்ட உள் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை கொடுக்க வேண்டும் என்றும், சளி காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுத்திய அவர், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் வைத்தார்.
மேலும் கொரோனா குறித்து தமிழக அரசு அறிவித்துள்ள ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும், தவறான தகவல் பரப்புவோர மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.