சென்னையை ஓவர்டேக் செய்த ஈரோடு : தமிழகத்தில் தாறுமாறாக உச்சம்பெறும் கொரோனா!!
Author: Babu Lakshmanan7 August 2021, 7:52 pm
சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 2 ஆயிரத்தை நெருங்கியே உள்ளது.
கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக சராசரி பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது. இன்றும் 2,000-ஐ நெருங்கிய பாதிப்புகளே இருந்து வருகின்றன. அதாவது, 1,969 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,73,352ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக, கோவையில் இன்று 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 194 பேருக்கும், செங்கல்பட்டுவில் 115 பேருக்கும், ஈரோட்டில் 198 பேருக்கும், தஞ்சையில் 110 பேருக்கும் உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,289ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,839 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 18 ஆயிரத்து 777ஆக அதிகரித்துள்ளது.
0
0