காஞ்சி.,யில் 10,000த்தை கடந்தது மொத்த பாதிப்பு : மாவட்ட வாரியான நிலவரம்..!
3 August 2020, 6:14 pmசென்னை : தமிழகத்தில் தொடர்ந்து 6 ஆயிரத்திற்கும் குறைவாக கொரோனா தொற்று இருந்து வரும் நிலையில், மாவட்ட வாரியான பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. வந்தது. இன்று 5,609 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் சென்னையில் 1,021 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. இதுவரையில் 1,02,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ராணிப்பேட்டையில் 382 பேருக்கும், விருதுநகரில் 348 பேருக்கும், திருவள்ளூரில் 332 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காஞ்சிபுரத்தில் 322 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த மாவட்டத்தில் மட்டும் மொத்த பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விபரம் :-