நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாக செயல்படும் வெங்காயம்!!!

Author: Hemalatha Ramkumar
23 September 2022, 4:37 pm
Quick Share

இன்றைய காலகட்டத்தில், நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நீரிழிவு நோய் வளர்ந்துள்ளது. இந்த அதிகரிப்புக்கான காரணம் தவறான வாழ்க்கை முறை, உடல் செயல்பாடு இல்லாமை, மன அழுத்தம் மற்றும் தவறான உணவுப் பழக்கம். சர்க்கரை நோய் வந்தால், உடலில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.

இந்த நோயை வேரிலிருந்தே அழிக்க முடியாவிட்டாலும் கட்டுப்படுத்தலாம். நீரிழிவு நோயில் 2 வகைகள் உள்ளன. வகை 1 நீரிழிவு மற்றும் வகை 2 நீரிழிவு. வகை 1 நீரிழிவு நோயில், இன்சுலின் கணையத்தால் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அதே சமயம் வகை 2 நீரிழிவு நோயில், இன்சுலின் சிறிய அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இரத்த குளுக்கோஸைக் குறைப்பதில் உணவுக்கு முக்கிய பங்கு உண்டு. இருப்பினும், நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும் சில உணவுகள் உள்ளன. சமீபத்திய ஆய்வு ஒன்று, ஒரு வகை காய்கறிகளை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க சிறந்த வழியாகும் என்பதை கண்டறிந்துள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு வெங்காயத்தை உணவு நிரப்பியாகப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும். இதைத் தவிர, வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்வது உதவலாம். இதற்காக வெங்காயத்தை அதிக அளவில் சாப்பிடத் தொடங்க வேண்டும் என்று அர்த்தமல்ல என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இது குறித்த கூடுதல் ஆராய்ச்சி தேவை.

Views: - 366

0

0